மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்று அந்நாட்டு நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாலத்தீவு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த முடியாது என ஆளும் அரசு கூறியுள்ளது.
தீவிரவாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மாலத்தீவு முன்னாள் அதிபர் மொகமது நசீத் உள்பட 9 பேரை விடுவிக்குமாறு உத்தரவிட்ட மாலத்தீவு உச்சநீதிமன்றம், எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட 12 பேர் மீதான தகுதிநீக்கத்தையும் ரத்து செய்தது.
இதையடுத்து, நாடாளுமன்றத்துக்கு வந்த 12 எம்.பி.க்களை உள்ளே அனுமதிக்காத ராணுவத்தினர், நாடாளுமன்றத்தையே தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர். இதையடுத்து, ஆளும் அரசு மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவர உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளை பணிநீக்கம் செய்ய அதிபர் யாமீன் முயற்சி மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ள நீதித்துறையினர், இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…