தமிழக அரசால் உதவ முடியாவிட்டால் சீட்டு ஒதுக்குங்கள்! மு.க.ஸ்டாலின் ட்வீட்!

தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்கள் இடம் கிடைத்தும் மாணவர்கள் அதனைத் தொடர முடியாத சூழல் நிலவுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், இதன் மூலமாக 405 மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர உள்ளனர்.  இந்த இடஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்த இயலாத நிலையில், உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து அரசு பள்ளி மாணவர்களின், கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என்று அறிவித்தது. அதேபோல தமிழக அரசும் அந்த அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்கள் சிலர் பணிக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து மருத்துவ படிப்புகளில் இடம் கிடைத்தும் மாணவர்கள் அதனைத் தொடர முடியாத சூழல் நிலவுவதாகவும், அரசுத் தரப்பிலிருந்து இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்.’தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாமல் கேட்டரிங் பணிக்கு செல்லும் மாணவன் யுவன்ராஜ், திருவண்ணாமலையில் இதேபோல் தவிக்கும் மூன்று மாணவியர் என அவலங்கள் தொடர்கிறது. தமிழக அரசால் உதவ முடியாவிட்டால் சீட்டு ஒதுக்குங்கள், கட்டணத்தை திமுக ஏற்கும் என பதிவிட்டுள்ளார்.

Recent Posts

ஒரு வழியா முடிஞ்சது! ‘கோட்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…

18 mins ago

பிரதமரின் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்யும்.? முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..

சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…

28 mins ago

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

49 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

50 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

1 hour ago

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

3 hours ago