மீண்டும் வெளியாகும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்..!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெறியாகி இன்றுடன் 1 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரீ ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்க்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரங்களாக இயக்குநர் கௌதம் மேனன், விஜே. ரக்ஷன், நிரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை ஆன்றோ ஜோசப் தயாரித்திருந்தார். அழகான பெண்கள் சிலர் ஆண்களை ஏமாற்றும் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த நரஞ்சனியை படப்பிடிப்பின் போது காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெறியாகி இன்றுடன் 1 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரீ ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.