Categories: இந்தியா

அடுத்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. பிரதமராகும் போட்டியிலும் இல்லை – சரத் பவார்

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட விரும்புவதாக சரத் பவார் கருத்து.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பிரதமர் பதவிக்கான போட்டியில் தாம் இல்லை என்றும், வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனவும், ஆனால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இந்த நாட்டில் நிலையான மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசாங்கம் தேவை.

நாட்டின் முனேற்றத்திற்காக உழைக்கும் தலைமையை எதிர்கட்சிகள் விரும்புகிறது.  நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை. எதிர்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டணியில் நான் பிரதமர் வேட்பாளராக இல்லை. வரும் மக்களைவைத் தேர்தலில் எதிர்கட்சி தரப்பு வெல்லும் நிலையில், பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான பணியை எதிர்கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

நாங்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம். பொதுமக்கள் எங்களுக்கு பலத்தையும் ஆதரவையும் வழங்கினால், நாங்கள் அதை முன்னெடுத்துச் செல்வோம். நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து, முன்னோக்கி செல்லும் பாதையை முடிவு செய்ய தயாராக உள்ளன. நாங்கள் ஒரு கொள்கையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில், அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் நாங்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம்.

எனவே, நானும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறேன். மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதால் பிரதமர் வேட்பாளர் போட்டியிலும் நான் இல்லை என்றார். பிரதமர் வேட்பாளர் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். இது குறித்து ஆம் அத்மி, உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி அல்லது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் நான் உள்பட சில தலைவர்கள் விவாதிக்க உள்ளாம்.

மேலும், ராகுல் காந்தியின் பாத யாத்திரை, கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலித்தது ஒரு சிறந்த உதாரணம் என்றார். இதனிடையே, சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சர்த் பவார் அறிவித்தார். இது கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன்பின் தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான்? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…

7 mins ago

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

1 hour ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

8 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

14 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

15 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

16 hours ago