“சென்னை – புதுச்சேரி இடையே நீர்வழி போக்குவரத்து துவங்கவுள்ளதை வரவேற்கிறேன்!” – பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை – புதுச்சேரி இடையே நீர்வழி போக்குவரத்து தொடங்கவுள்ள திட்டத்திற்கு வரவேற்பதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை – புதுச்சேரி இடையே நீர்வழி போக்குவரத்து தொடங்குவதை வரவேற்பதாக தெரிவித்தார். பின்னர் சென்னை- கன்னியாகுமரிக்கு இடையேயும் நீர்வழி போக்குவரத்து திட்டம் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தை விரைவில் முடிக்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர், சென்னை-கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரயில்வே பாதை அமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.