அந்த படத்திற்கு பிறகு சூர்யா சினிமாவை விட்டு ஓடி விடுவார் என்று நினைத்தேன் ! முன்னணி இயக்குநரின் ஓபன் டாக் !

நடிகர்  சூர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் நடிப்பில் “காப்பான்” படம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.  சூர்யாவிற்கு “காப்பான்” படம் நல்ல ஓபன்னிங்காக இருந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் இந்த படத்தை இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் சூர்யாவின் வளர்ச்சி பற்றி பேசியிருந்தார்.சூர்யாவின் முதல் படமான “நேருக்கு நேர்” படத்தில் ஒளிப்பதிவாளராக இயக்குநர் கே.வி ஆனந்த் பணியாற்றியிருந்தார்

.அப்போது அவர் சூர்யா இந்த படத்துடன் சினிமாவை விட்டு ஓடிவிடுவார் என்று நினைத்தேன்.ஆனால் அவர் கௌதம்மேனன் , அமீர்,பாலா என பல் இயக்குநர்கள் படத்தில் நடித்து நிறைய கற்று கொண்டுள்ளார். மேலும் அவர் நான் அவரை வைத்து அயன் படத்தை எடுக்கும் போதே அவர் சுலபமாக நடித்து கொடுத்தார் என்று பேசியுள்ளார்.