கிடைத்த வாய்ப்பை நடிகர் கருணாஸ் தவறாக பயன்படுத்துவதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு புறநகர் மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாளவாடி ஒன்றியத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர்ரின் அறிவுரைப்படி பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், புதிய வாக்காளர்களை சேர்த்தல் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.பசுமை வழி சாலையை பொறுத்தவரை அனைத்து நிதியுதவியும் மத்திய அரசு வழங்குகிறது. மத்திய சுற்றுச்சூழல் கண்டிப்பாக அனுமதி வழங்கும். மாநில சுற்றுச் சூழல் துறை அனுமதி வழங்க தயாராக உள்ளது. பசுமை வழிச்சாலை 100 சதவீதம் அமைய வாய்ப்பு உள்ளது. கருணாசுக்கு சட்ட மன்ற உறுப்பினர் பதவி என்பது மிகப் பெரிய பதவி. அனைவருக்கும் கிடைக்காது. கருணாஸ் தனக்கு கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன் படுத்த வேண்டும். நல்ல முறையில் பயன்படுத்த தவறுகிறார்.என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், எஸ்.கே.பழனிசாமி, சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என். மாரப்பன், தாளவாடி ஒன்றிய செயலாளர் பட்டிமல்லப்பா, பாசில் , அரசூர் பூபதி, அரசூர் எல்வரன்மற்றும் ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
DINASUVADU
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…