கடந்த 2002-ம் ஆண்டு நார்வே நாட்டின் இளவரசி மார்த்தா லூயிஸ் ,டென்மார்க்கை சேர்ந்த பிரபல நாவலாசிரியர் அரி பென்னை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தன.
கடந்த 2017-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.இந்நிலையில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் தனியாக வாழ்ந்து வந்த அரி பென் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் பத்திரிகைக்கு தெரிவித்தார்.
அரி பென் எப்படி தற்கொலை செய்து கொண்டார்.?தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்பது என்ன உள்ளிட்ட தகவல்கள் வெளியிடவில்லை.அரி பென்னின் மறைவுக்கு நார்வே மன்னர் ஹரால்ட் மற்றும் ராணி சோன்ஜா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரி பென் பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார். அவரை பற்றிய இதமான மற்றும் நல்ல நினைவுகளை எங்களுடன் எடுத்துச் செல்கிறோம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…