கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் ராஜேஷ்.இவர் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்.ஒருநாள் இவரது செல்போனுக்கு ஒரு மிஸ்ட் கால் வந்துள்ளது.
அந்த மிஸ்ட் காலை திரும்ப இவர் அழைத்து பேசும் போது ஒரு பெண் தவறுதலாக ராங் கால் செய்து விட்டதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.சில நாட்கள் கழித்து அந்த நம்பருக்கு திரும்ப அழைத்து நட்பு முறையில் பேசியுள்ளார்.
இவர்களுடைய நட்பு விரிவடையவே ராஜேஷ் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறியுள்ளார்.அதை தொடர்ந்து அந்த பெண் ராஜேஷிடம் தன் சொந்த ஊர் பணக்குடி என்றும் கணவனை இழந்து தனியாக வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
அந்த பெண்ணிற்கு ஆறுதல் கூறுவது போல் ராஜேஷ் பேசியதால் தன் அந்தரங்க விஷயங்கள் வரையிலும் அவரிடம் பேசியுள்ளார்.இவ்வாறு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது அந்த பெண்ணை நேரில் பார்த்து பேச விரும்புவதாக ராஜேஷ் கூறியுள்ளார்.
அப்போது அந்த பெண்ணை காவல்கிணறுக்கு வருமாறு கூறியுள்ளார்.அவரது பேச்சை நம்பி வந்த அந்த பெண்ணை அங்குள்ள ஒரு விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.அப்போது அந்த பெண்ணிடம் அங்கு வைத்தே திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
அதை நம்பிய அந்த பெண்ணும் அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.அந்த வகையில் இருவரும் அடிக்கடி காவல்கிணறுக்கு வந்து செல்வதாக இருந்துள்ளனர்.ராஜேஷின் நடவடிக்கையில் அவரது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து சந்தேகம் அதிகமாகவே அவரின் மனைவி, தனது உறவினரை அழைத்து புலம்பியுள்ளார்.கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து அவர் எங்கு செல்கிறார் என்பதை கவனித்துவந்துள்ளனர்.
அப்போது காவல்கிணரில் உள்ள விடுதிக்கு அடிக்கடி செல்கிறார், அவர் பின்னாடியே வேறு ஒரு பெண்ணும் அறைவரைக்கும் செல்வதை அறிந்த அந்த நபர் தொலைபேசி மூலம் ராஜேஷின் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தமது உறவினர்களையும் அழைத்து கொண்டு விடுதிக்கு வந்த மனைவி கையும் களவுமாக இருவரையும் பிடித்து கோபத்தில் ராஜேஷை அடித்து மிதித்துள்ளார்.அவருடன் இருந்த பெண்ணையும் உதைத்து தள்ளியுள்ளார்.
இந்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது அந்த பெண்,தமக்கு திருமணம் ஆகவில்லையென்று ராஜேஷ் தம்மை ஏமாற்றியதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இருவரையும் எச்சரித்து காவல்துறையினர் அனுப்பிவைத்துள்ளனர்.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…