10 மடங்கு வேகத்தில் சூறாவளி.. தரைமட்டமான வீடுகள்.. பயத்தில் தென்மேற்கு புளோரிடா மக்கள்..

புளோரிடாவை தாக்கிய மிக ஆபத்தான சூறாவளி, மக்களை பீதியடைய செய்துள்ளது. தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்.. வைரலான வீடியோ!

இன்று(செப் 29) 10 மடங்கு வேகத்தில் வீசிய மிக சக்திவாய்ந்த சூறாவளி தென்மேற்கு புளோரிடாவில் நிலச்சரிவை ஏற்படுத்தியது, அது மட்டுமின்றி அதிக மக்கள் தொகை கொண்ட ஃபோர்ட் மியர்ஸுக்கு மேற்கே உள்ள கயோ கோஸ்டா அருகே கடற்கரையோரத்தில் அமைந்த வீடுகளையும் தரைமட்டமாக்கியுள்ளது.

மேலும் இந்த பயங்கரமான சூறாவளியால் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் கவிழ்த்தப்பட்டன மற்றும் சாலையோர மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தன.

இந்த சூறாவளியுடன் கூடிய மழையால் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளெருக்கு ஏற்பட்டு சாலைகள் மற்றும் வீடுகள் பலத்த சேதங்கள் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment