கொரோனா பரவலுக்கு மத்தியில் தாய் பால் தானம் செய்வது எவ்வளவு முக்கியம்?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்வது குறித்து மிக முக்கியமானது மற்றும் அவசியமானது என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கும், புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கும் அதிகம் பரவி வருகிறது. இந்நிலையில் பல தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பல தாய்மார்கள் உயிர் இழந்து விடுகின்றனர். அதனால் குழந்தைகள் தாய்ப்பாலுக்கு ஏங்கி வருகிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அந்த தாயின் குழந்தைக்கு பிறர் பால் தானம் செய்வது குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகள் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை உள்ள நேரங்களில் தாய்ப்பால் குடிப்பது மிக அவசியம் என கூறியுள்ள தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, தாயை இழந்த குழந்தைகளுக்கு அல்லது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு தங்கள் ஹெல்ப்லைன் நம்பர் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக பிறரிடம் கேட்டு அந்த குழந்தைகளுக்கு பால் தானம் செய்வதற்கு தாங்கள் உதவி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் டெல்லியில் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படும் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர், பிளாஸ்மா மற்றும் மருந்துகள் ஆகியவற்றிற்கான ஆகியவை கிடைக்கும் இடங்கள் குறித்தும் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் இல்லாமல் இருக்கிறது என்பதற்காக தாய்ப்பால் கொடுக்கக் கூடிய நன்கொடையாளர்கள் குறித்த வேண்டுகோளும் தற்போது தங்கள் மூலம் முன்வைக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது. மேலும், இது குறித்த தவறான கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தாய்மார்களிடம் இருந்து வாங்கிக் கொடுக்கும் போது குழந்தைகளுக்கு நல்லது கிடையாது எனவும், கொரோனாவால் தாய் உயிரிழந்த நிலையில் அந்த குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கொரோனா பரவும் எனவும் சில வதந்திகள் பரவுவதாகவும், அது உண்மையல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் லக்னோவை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு குழந்தைக்கு தாய்ப்பால் தானம் செய்யுமாறு தங்களிடம் கேட்டதாகவும், கொரோணா பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைக்கு தாங்கள் தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பால் வாங்கிக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

அது போல இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் போல மற்ற பிள்ளைகளையும் நினைத்து தாய்ப்பால் தானம் செய்ய முன்வர வேண்டும் எனவும், உங்களின் இந்த சிறு உதவி குழந்தைகளின் உயிரை பாதுகாக்கும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Rebekal

Recent Posts

மீண்டும் ஏகிறியது தங்கம் விலை…சவரன் ரூ.360 உயர்வு.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…

6 mins ago

கில்லி படத்தில் ரஜினியை பார்த்து தான் விஜய் நடிச்சாரு! இயக்குனர் தரணி சொன்ன சீக்ரெட்!

Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல…

20 mins ago

இந்தியாவில் நடைபெற வாய்ப்பு அதிகம் !! இந்திய செஸ் சம்மேளனம் தகவல் !!

Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே…

23 mins ago

இந்த வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்.. டூ பிளெசிஸ் பெரும் மூச்சு!

IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…

50 mins ago

‘ஆக்ரோஷமான ஆட்டம் எந்த வகையிலும் குறையாது’ – டேனியல் வெட்டோரி

Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…

1 hour ago

தேர்தல் ஒப்புகை சீட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி.! – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!

VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…

1 hour ago