பெரு நாட்டில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 36பேர் பலி .!

பெரு நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரு நாட்டில் இடைவிடாது பெய்துவரும் தொடர் கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு, தெற்கு பெருவில் உள்ள பல கிராமங்களுக்குள் மண், நீர் மற்றும் பாறைகள் அடித்துச் செல்லப்பட்டன. பாலங்கள், பாசன கால்வாய்கள் மற்றும் சாலைகளும் இந்த நிலச்சரிவால் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது, மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலச்சரிவின் போது சிலர் வேனில் ஏறி தப்பிக்க முயன்றனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வேன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்தது. பெரு நாட்டின் மிஸ்கி என்ற இடத்தில் 36 உடல்கள் மீட்கப்பட்டதாக மரியானோ நிக்கோலாஸ் வால்கார்செல் நகராட்சியின் சிவில் பாதுகாப்பு அதிகாரி வில்சன் குட்டரெஸ் கூறினார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment