அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மக்கள் நீதி மய்ய நிர்வாகி பிரியதர்ஷினி புகார் மனு அளித்துள்ளார்.
கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இதற்கு அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இது குறித்து, அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் ‘கமலின் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று காட்டமாக பதிவிட்டிருந்தார். இந்த கருத்திற்கு எதிர்ப்புகிளம்பியுள்ளது.
தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மக்கள் நீதி மய்ய நிர்வாகி பிரியதர்ஷினி புகார் மனு அளித்துள்ளார்.அதில்,அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் பேசியுள்ளார் என தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மக்கள் நீதி மய்ய நிர்வாகி பிரியதர்ஷினி புகார் மனு அளித்துள்ளார்.
கமல் ஹாசன் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…