வன்முறையை தூண்டுகிறார்,நடவடிக்கை எடுக்க வேண்டும் ! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்  மக்கள் நீதி மய்ய நிர்வாகி பிரியதர்ஷினி புகார் மனு அளித்துள்ளார்.

கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இதற்கு அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து, அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் ‘கமலின் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று காட்டமாக பதிவிட்டிருந்தார். இந்த கருத்திற்கு எதிர்ப்புகிளம்பியுள்ளது.

தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்  மக்கள் நீதி மய்ய நிர்வாகி பிரியதர்ஷினி புகார் மனு அளித்துள்ளார்.அதில்,அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் பேசியுள்ளார் என தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்  மக்கள் நீதி மய்ய நிர்வாகி பிரியதர்ஷினி  புகார் மனு அளித்துள்ளார்.

கமல் ஹாசன் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment