Categories: இந்தியா

GST tax evasion: 2 ஆண்டுகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு! 719 பேர் கைது!

கடந்த 2 ஆண்டுகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, 719 பேர் கைது.

கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரூ.55,575 கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு மோசடியை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மோசடி தொடர்பாக 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சரக்கு மற்றும் சேவை வரி செல்லுவதற்கான அடையாள எண்களில் 22,300க்கும் மேற்பட்ட போலிகளையும் ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகத்தின் (டிஜிஜிஐ) அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தெத்து போலி விலைப்பட்டியல்களை வழங்கி, அதன் மூலம் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) ஏய்ப்பதன் மூலம் மோசடியான முறையில் உள்ளீட்டு வரிக் கிரெடிட்டை (ITC) பெறுவதற்கும் அனுப்புவதற்கும் நேர்மையற்ற நிறுவனங்களுக்கு எதிராக நாடு தழுவிய சிறப்பு இயக்கத்தை அரசாங்கம் தொடங்கியது.

இந்த நிலையில், சிறப்பு இயக்கத்தின் இரண்டு ஆண்டுகளில், 55,575 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜிஎஸ்டி/ஐடிசி மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் 20 CA/CS வல்லுநர்கள் அடங்குவர் என்றும் ஜிஎஸ்டி அதிகாரி கூறினார். இந்த காலகட்டத்தில் 3,050 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தன்னார்வ டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

நம்பகமான உளவுத்துறை, டிஜிஜிஐ, டிஆர்ஐ, வருமான வரி, அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ போன்ற உளவுத்துறை நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, வரி ஏய்ப்பாளர்களை கண்டுபிடிக்க உதவியது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வரி ஏய்ப்பைத் தடுக்க ஜிஎஸ்டி துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், போலி ஐடிசி உரிமைகோரல்களுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அக்டோபரில், ஜிஎஸ்டி வருவாய்கள் 1.52 லட்சம் கோடி ரூபாயில் இரண்டாவது அதிகபட்ச வசூலைப் பதிவு செய்துள்ளன. ஏப்ரல் மாதத்திற்கு அடுத்தபடியாக ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. தொடர்ந்து எட்டு மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

1 hour ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

1 hour ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

1 hour ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

1 hour ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

2 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

2 hours ago