வரும் ஞாயிற்று கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் அதனை கொண்டாட மக்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். துணிக்கடைகள், பட்டாசு கடைகள், அத்திவாசியா பொருட்கள் என மக்கள் கூட்டம் அனைத்து இடங்களிலும் அதிகமாக இருக்கிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதால் அதிக அளவு மாசு ஏற்படுவதாக கூறி, பட்டாசு வெடிக்க தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதனை அடுத்து உச்சநீதிமன்றமானது பட்டாசு தயாரிப்பாளர்களை சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காதபடி பசுமை பட்டாசு தயாரிக்க அறிவுறுத்தியது.
உச்சநீதிமன்ற அறிவிவுரையை ஏற்று, மத்திய அரசின் வெடிபொருள் தயாரிப்பு துறை, பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான பார்முலாவை வழங்கியது. இந்த பார்முலா விலை அதிகமாக இருப்பதால், பெரிய பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலையில் மட்டும் இந்த வருடம் பசுமை பட்டாசு தயாரித்தனர். இந்த வகை பட்டாசுகளில் க்ரீன் கிரேக்கர்ஸ் என எழுதப்பட்டிருக்கும் .
இந்த வகை பட்டாசு இந்த வருடம் 30 முதல் 50 சதவீதம் வரை விற்பனைக்கு வந்துள்ளது.எனவும், அடுத்த வருடம் 100 சதவீதம் வழங்கப்படும் எனவும் பட்டாசு ஆலைகள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…