ஜிஎஸ்டி இழப்பீடு தொகை : மாநிலங்களுக்கு 17-வது தவணையாக ரூ.5,000 கோடி விடுவிப்பு

ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்கான 17-வது தவணையாக ரூ. 5,000 கோடியை மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சகம் வழங்கியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்கான 17-வது தவணையாக ரூ. 5,000 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 4,730.41 கோடி 23 மாநிலங்களுக்கும், ரூ. 269.59 கோடி ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் (டெல்லி , ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள ஐந்து மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம்,  மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் சிக்கிமுக்கு சரக்கு மற்றும் சேவை வரி முறையை செயல்படுத்தியதால் எந்த விதமான வருவாய் இழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பிடப்பட்ட மொத்த ஜிஎஸ்டி இழப்பீட்டு  நிதியில் 91 சதவீதம், மாநிலங்களுக்கும் , சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ரூ. 91,460.34 கோடி மாநிலங்களுக்கும், ரூ. 8,539.66 கோடி  சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும்  வழங்கப்பட்டுள்ளது.இந்த வாரத்திற்கான நிதி 5.5924 சதவீதம் என்னும் வட்டி விகிதத்தில் கடனாக வாங்கப்பட்டுள்ளது. இது வரை, ரூ. 1,00,000 கோடி, 4.8307 சதவீதம் என்னும் சராசரி வட்டி விகிதத்தில் மத்திய அரசால் கடனாக வாங்கப்பட்டுள்ளது.மத்திய அரசு தெரிவித்த விருப்பத் திட்டங்களில் முதலாம் விருப்பத் திட்டத்தை அனைத்து மாநிலங்களும் விரும்பின. இதைத் தொடர்ந்து, மொத்த மாநில உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு ரூ. 1,06,830 கோடியைக் கூடுதல் கடனாகப் பெற்றுக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழகம், மாநில மொத்த உற்பத்தியில் 0.50 சதவீத அளவுக்கு ரூ.9627 கோடியும், சிறப்பு ஏற்பாட்டின் மூலம் வெளிச்சந்தையில் ரூ.6002.53 கோடியும், புதுச்சேரி சிறப்பு ஏற்பாட்டின் மூலம் வெளிச்சந்தையில் ரூ.713.61 கோடியும் கூடுதலாக கடன் திரட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Recent Posts

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்… CBI அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்…

Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…

2 mins ago

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…

6 mins ago

ரோஹித்திடம் பேசியதை நினைத்து மனம் நெகிழ்ந்த கம்பிர் ! என்ன விஷயம்னு தெரியுமா ?

Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன்…

16 mins ago

டி20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ ! இந்த டைம் மிஸ்ஸே ஆகாது !

BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…

34 mins ago

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

2 hours ago

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

2 hours ago