இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் “ஆர்ஆர்ஆர்” திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. மூன்று மொழிகளில் படம் வெளியான நிலையில், படம் பெரிய வெற்றியை பெற்று உலக அளவில் ரூ.1800 கோடிக்கு அதிகமாக வசூல் சாதனை புரிந்தது.
இந்நிலையில், இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்த நிலையில், பல விருதுகளையும் குவித்து வருகிறது, அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றுள்ளது.
95வது ஆஸ்கர் விழாவுக்கும் ஒரிஜினல் பாடல் பிரிவின் இறுதி பட்டியலுக்கு ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வாகியுள்ளதையடுத்து, இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த விழா நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளதால், நடிகர் ஷாருக்கான் தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் ” சார் இப்போதுதான் எழுந்து, கோல்டன் குளோப்ஸில் உங்கள் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நாட்டு நாட்டுக்கு நடனமாடத் தொடங்கினார். இதோ இன்னும் பல விருதுகள் மற்றும் இந்தியாவை பெருமைப்படுத்தும்” என பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு ராஜமௌலி ஷாருக்கானின் பதான் பட டிரைலரை பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.