அம்மாவையும் மிஞ்சிய நான்கு மாத மகள்.! கோடீஸ்வரராக மாறிய ஆச்சரியம்.!

நைஜீரியாவில் பிறந்து நான்கு மாதமேயான குழந்தை தனது திறமையால் கோடீஸ்வரராக மாறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நைஜீரியாவில் எழுத்தாளர், சமூக ஊடக நிபுணர், தொழிலதிபர் என பல துறைகளில் சிறந்து விளங்குபவர் லவுராய்கிஜி. இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு லவுரல் என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அந்த நான்கு மாத குழந்தை தனது திறமையால் கோடீஸ்வரராக மாறி உள்ளதாக தாயான லவுராய்கிஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

இன்ஸ்டாகிராமில் பிரபலமாகிய தனது மகள் தூதர் ஒப்பந்தத்தை பெற்று கோடீஸ்வரர் ஆகியதாகவும், தன்னையே தனது மகள் மிஞ்சி விடுவாள் என்றும், இந்த வயதில் இது பெரிய வேலையே என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இன்ஸ்டாகிராமில் பிரபலமான லவுராய்கிஜி தனது மகளின் புகைப்படத்தை வைத்து மற்றவர்கள் செய்யும் பிரபலங்கள் அதிகளவில் பகிரப்படுவதாலையே இந்த அதிர்ஷ்டம் அவருக்கு அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கேட்ட பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.