“நதியினில் வெள்ளம்;என் நிலைமை அவருக்கு தெரியும்” – எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் கருத்து..!

வேளாண் சட்டத்துக்கு தனித் தீர்மானம் குறித்த விவாதத்தின்போது தன் நிலைமை நீர்வளத்துறை அமைச்சருக்கே தெரியும் என்று எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று 6-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றை தினம் கால்நடை, வேளாண் மற்றும் மீன்வள ஆகிய துறைகளின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அதன்படி,சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.இதனையடுத்து, தமிழக அரசின் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் முன்மொழிந்தார்.

அந்த தீர்மானத்தில்,3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த மூன்று சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டு வந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து,மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை கண்டித்து பாஜக உறுப்பினர்கள் வெளியேறினர்.

அப்போது,சட்டப் பேரவையில் வேளாண் சட்டத்துக்கு தனித் தீர்மானம் குறித்த விவாதத்தின்போது எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தீர்மானத்தை தன்னால் ஆதரிக்கவோ எதிர்க்கவோ முடியாத நிலையில் உள்ளதாக கூறியதாவது:

“நதியினில் வெள்ளம்,கரையினில் நெருப்பு,இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு..என்று சிவாஜி பட பாடலை மேற்கோள் காட்டி,”இதுதான் என் தற்போதைய நிலைமை”,என்று கூறினார்.மேலும், மூன்று வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் எனது நிலை என்ன என்பது அவை முன்னவருக்குத் தெரியும் என்று கூற, அவையில் சிரிப்பலை எழுந்தது.

இதனைத்தொடர்ந்து,வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்று அவரிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கேட்டதற்கு, “வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், அது தொடர்பாக தீர்ப்பு வெளிவந்த பிறகே,என்னால் பேச முடியும்”, என்று ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பதிலளித்தார்.

இதற்கிடையில்,பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து போன்று, அதிமுகவும் வெளிநடப்பு செய்தது.

Recent Posts

ப்ளீஸ் பவுலர்களை யாராவது காப்பாற்றுங்க… ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல்!

Ravichandran Ashwin: ஐபிஎல் தொடரில் விளையாடும் பந்துவீச்சாளர்களை யாரவது காப்பாற்றுங்க என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும்…

7 mins ago

யுவராஜை கவுரவிக்கும் ஐசிசி ..! டி20 உலகக்கோப்பையில் புதிய ரோல் !!

Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…

28 mins ago

தேர்தல் நாளிலும் ஓயாத வன்முறை.! மணிப்பூரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.!

Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…

33 mins ago

சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து…15 பேர் படுகாயம்.!

Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர்…

50 mins ago

காலி சொம்பு மட்டும் தான் மிச்சம்… பாஜகவை சொம்புடன் ஒப்பிட்டு விமர்சித்த ராகுல் காந்தி!

Rahul Gandhi: பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு…

1 hour ago

ஓரே கட்டமாக நடைபெற்ற கேரளாவில் 70.8% வாக்குப்பதிவு.!

Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…

2 hours ago