புஜாரா, ஜடேஜா, உள்ளிட்ட ஐந்து வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்!

தங்கள் இருக்குமிடம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கத்தால், கே.எல்.ராகுல், சேடேஷ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி சர்மா ஆகியோருக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அவர்கள் இருக்குமிடத்தை தெரிவிக்குமாறு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை கூறினர். அதில் சில வீரர்கள் சரியான தகவலை அளிக்கவில்லை.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புஜாரா, லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் தங்களின் இருக்குமிடத்தை முன்கூட்டியே தெரிவிக்காத நிலையில், அதற்க்கு விளக்கம் கேட்டு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்த செயல், விதிமுறைகளை கடைபிடிக்காமல் தவறியது என தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை தெரிவித்தது.