ரூ.28 கோடி மதிப்பிலான திமிங்கல வாந்தியை போலீசாரிடம் ஒப்படைத்த மீனவர்கள்

ரூ.28 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல வாந்தி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

கேரளா மாநிலம் விலிங்ஹாம் என்ற இடத்தில் மீனவர்கள் ரூ.28 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல வாந்தியை கண்டுபிடித்து கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கடலோர போலீசார் இது பற்றி பிடிஐயிடம் கூறியது, “மீனவர்கள் அம்பர்கிரிஸை எங்களிடம் ஒப்படைத்தனர். நாங்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தோம், அவர்கள் எங்களிடமிருந்து அதைப் பெற்று சென்றதாக” கூறினர்.

ஒரு கிலோ திமிங்கல வாந்தி சர்வதேச சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. இருப்பினும் அதனை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment