விருதுநகரில் பட்டாசு ஆலையில் தீ விபத்து..!

விருதுநகர் மாவட்டம் ஆம்பத்தூர் அருகே சோனி பட்டாசு ஆலை உள்ளது. இது நாக்பூர் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பட்டாசு ஆலையில் மணி மருந்து கலவை உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது இதில் ஒரு அறை முற்றிலும் சேதமடைந்தது, லிங்கா புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராம குருநாதன் இந்த விபத்தில் சிக்கி 70 சதவீத தீக்காயம் அடைந்தார்.

இந்த நிலையில் இதையடுத்து குருநாதனை  மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்,  மேலும் இதுகுறித்து ஆமத்தூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.