வறுமை காரணமாக 5 வருடங்களில் 5 குழந்தைகளை கொன்ற தந்தை.!

ஹரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் ஜும்மா கூலி தொழிலாளியாக உள்ளார். அவரது இரண்டு மகள்களும் ஜூலை 17 அன்று காணாமல் போயுள்ளனர்.  இந்நிலையில், ஒரு மகளின் உடல்  கிராமத்திற்கு அருகிலுள்ள ஹன்சி-புட்டானா இணைப்பு கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது. மற்றொறு கிராமத்தின் மற்றொரு மகளின் உடல் கிராமத்திற்கு வெளியே மீட்கப்பட்டது.

ஜும்மா கிராம பஞ்சாயத்தில் தனது மகளை கொலை செய்ததாக  ஒப்பு கொண்டார். மேலும், ஜும்மா தனது மூத்த மகனை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்ததாகவும், தனது மற்றொரு மகன் மற்றும் ஒரு மகளை கொலை செய்ததை பஞ்சாயத்தில் அவர் ஒப்புக்கொண்டார்.

வறுமை காரணமாக இந்த கொலைகளை செய்தேன் என கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசாரிடம் தகவல் கொடுத்தனர். பின்னர்,போலீசார் ஜும்மாவை கைது கைது செய்து   தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.