தீர்வின்றி தொடரும் விவசாயிகள் போராட்டம் – தற்கொலைக்கு முயன்ற விவசாயி!

கிட்டத்தட்ட ஒரு மாதமாக தொடரும் விவசாயிகள் போராட்டத்தினால் மனமுடைந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயி டெல்லி எல்லையில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில், ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 27 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல விவசாயிகள் கூட்டம் கூட்டமாக தங்களது மாநிலங்களிலிருந்து மிகக் கடினப்பட்டு இங்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதுபோல பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தர்ன்தர்ன் எனும் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே இந்தப் போராட்டம் மூலமாக பல விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். விவசாயிகளுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவு கிடைத்தாலும், அரசாங்கம் விவசாயிகளின் போராட்டம் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பதால், போராடும் விவசாயிகளும் பலர் சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்தாலும், சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை மட்டுமே விவசயிகள் கோரிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்திருந்த விவசாயி ஒருவர் இன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அதற்கான காரணத்தையும் கடிதம் ஒன்றில் எழுதி வைத்துள்ளார். காவல்துறையினர் இந்த கடிதத்தை கைப்பற்றி விசாரித்துள்ளனர். தீர்வின்றி தொடரக்கூடிய போராட்டத்தால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால்தான் தற்கொலைக்கு முயன்று உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இவர் நன்றாக இருப்பதாகவும், ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rebekal

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

2 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

3 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

3 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

3 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

3 hours ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

4 hours ago