3-வது முறையாக கிராமி விருதை வென்ற பிரபல இந்திய இசையமைப்பாளர்.!

3வது முறையாக கிராமி விருதை வென்றார் இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்.

பெங்களூருவை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் 3-வது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார். லாஸ் ஏஞ்செல்ஸில் நடந்த விழாவில் தனது டிவைன் டைட்ஸ் ஆல்பத்துக்காக ரிக்கி கேஜ் இந்த கிராமி விருதை வென்றுள்ளார்.

‘டிவைன் டைட்ஸ் வித் ராக் – லெஜெண்ட் கோப்லேண்ட்’ என்ற ஆல்பத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு ரிக்கி கேஜ் கடந்த 2015-ஆம் ஆண்டும், 2022-ஆம் ஆண்டும் கிராமி விருதை வென்றார். இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரிக்கி கேஜ் கிராமி விருதை வென்றுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment