டிக்டாக்கால் சீர்குலைந்த குடும்பம்.! மனைவி மற்றும் மகள் பிரிந்த சோகத்தில் விபரீத முடிவு எடுத்த கணவர்.!

மனைவி மற்றும் மகள் இருவரும் டிக்டாக் மூலம் பழக்கமானவர்களுடன் இறங்கி போனதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக் செயலியால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் வந்துள்ளது. சமீபத்தில் அந்த செயலியை முடக்கியதை அடுத்து பலர் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். மேலும் இந்த டிக்டாக் செயலியால் பல குடும்பங்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளது. அந்த வகையில் டிக்டாக்கால் ஒர்ஷாப் உரிமையாளர் ஒருவர் வீடியோ மூலம் மரண வாக்குமூலம் கூறிவிட்டு தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் உள்ள பொம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜி. என். பாலன்நகரை சேர்ந்தவர் ரவி(44).இவரது மனைவியான கனகவள்ளிக்கும்(35), ரவிக்கும் 16வயதில் ஒரு மகள் மற்றும் 15வயதில் ஒரு மகனும் உள்ளனர். திருப்பூரில் ஒர்க்ஷாப் நடத்தி வரும் ரவியின் வாழ்க்கை டிக்டாக் என்ற ஆப் மூலம் சீர்குலைந்துள்ளது. ஆம் ரவியின் மனைவி மற்றும் மகள் டிக்டாக்கில் மூழ்கி போனது மட்டுமில்லாமல் டிக்டாக் மூலம் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த நபருடன் கனகவள்ளி அறிமுகமாகி அது கள்ளதொடர்பாக மாறியுள்ளது. அதே போன்று ரவியின் மகளும் டிக்டாக்கில் ஒருவரை காதலித்துள்ளார் வந்துள்ளார். இதனையறிந்த ரவி இருவரையும் கண்டிக்க, அவர்கள் கேட்ட பாடில்லை.

இதனையடுத்து கடந்த 3ம் தேதி ரவியின் மனைவி மற்றும் மகள் வீட்டை விட்டு சென்று விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். உடனடியாக அனுப்பர்பாளையம் காவல்நிலையத்தில் ரவி புகாரளிக்க, போலீசாரும் கனகவள்ளியிடம் ரவியுடன் சேர்ந்து வாழ அறிவுறுத்த கனகவள்ளி அதனை மறுத்ததுடன் ரவியை தரக்குறைவாகவும், கேவலமாகவும் பேசியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரவி வீட்டில் சென்று தனது மரண வாக்குமூலத்தை வீடியோ மூலம் கூறி விட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி விட்டு தூக்கில் தொடங்கியுள்ளார். அவரது மரணத்திற்கு காரணம் என்று கூறிய சூரம்பட்டியை சேர்ந்த 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிக்டாக்கால் ஒரு அழகான குடும்ப சீரழிந்தது மட்டுமில்லாமல் ஒரு உயிரையும் பறித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

1 hour ago

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…

2 hours ago

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

3 hours ago

பட்ஜெட் விலையில் அசத்தல் 5G ஸ்மார்ட்போன் !! ரயில்மி சி 65யின் அம்சம், விலை விவரம் இதோ !!

Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…

3 hours ago

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake விடீயோக்களை பார்த்துள்ளனராம்..!

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…

3 hours ago

தினமும் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…

4 hours ago