Monday, June 3, 2024

போலி சான்றிதழ்கள் – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

போலி சான்றிதழ்கள் பெறுவதை தடுக்க 8 வாரங்களில் விதிகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பழங்குடியினர், பட்டியலினத்தவர் என கூறி, போலி சான்றிதழ்கள் பெறுவதை தடுக்க 8 வாரங்களில் விதிகளை வகுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சான்றிதழ் பெற வேண்டும்.

சொக்கலிங்கம் என்பவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி சான்றிதழ்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழக அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES