கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதில், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன கட்டாய ஆவணங்களை செல்லுபடி காலத்தை மீண்டும் நீட்டித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகு ஒருவரின் ஓட்டுநர் உரிமம் அல்லது பிற மோட்டார் வாகன ஆவணம் முன்பே காலாவதியாகி விட்டால், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன கட்டாய ஆவணங்களை செல்லுபடிக் காலம் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்துமாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கும், தற்போதுள்ள நிலைமையை மனதில் வைத்துக் கொண்டு இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் இந்த ஆவணங்களின் நீட்டிப்பு தொடர்பாக மார்ச் 30, 2020, ஜூன் 9, 2020 மற்றும் ஆகஸ்ட் 24, 2020 அன்று இதே போன்று நீட்டிக்கப்பட்டது. டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடிக் காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…