மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர்! குவியும் பாராட்டுக்கள்!

தனது பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யும் ஆசிரியர் கமலவல்லி.

இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் தங்களது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் குடும்பத்திற்கு ஆசிரியர் கமலவள்ளி தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கருப்பம்புலம் கிராமத்தில் உள்ளது ஞானாம்பிகா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி.

இந்த பள்ளியில் 28 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் இரு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் கமலவல்லி, மாணவர்களின் குடும்பத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்துள்ளார்.

இவர், ஒவ்வொரு மாணவரின் குடும்பத்திற்கும் ரூ.1,000 ரொக்கம் வழங்கியுள்ளார். மேலும் சிலரின் குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனத்தின் மூலமாக ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களையும்  கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் கமலவல்லி கூறுகையில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருமே அன்றாடம் வேலைக்கு சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்பவர்கள். தற்போது ஊரடங்கால் வறுமையில் வாடும் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய நினைத்தேன் என தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளி ஆசிரியரின் இந்த  செயல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிற நிலையில், இவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

1 min ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

23 mins ago

விருதுநகர் கல்குவாரி விபத்து – நேற்று ஒருவர் இன்று ஒருவர் கைது.!

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…

46 mins ago

காங்கிரஸுக்கு சவால்.! இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி ஆவேசம்.!

Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

1 hour ago

இன்னும் 4 போட்டி இருக்கு … பாத்துக்கலாம் ..- தோல்விக்கு பின் ருதுராஜ் !!

Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…

1 hour ago

பேனரை கிழிச்சது தப்பு தான்! மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்!

Ajith Kumar Fan : தீனா படத்தின் ரீ -ரிலீஸின் போது விஜயின் கில்லி பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சினிமாத்துறையில் அஜித்…

1 hour ago