Categories: இந்தியா

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட சில மசாலா பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு என்ற புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல் இருப்பது கண்டறியப்பட்டதால், அந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 527 பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 2020 முதல் ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் சோதனை நடத்தியுள்ளது. அதில் இந்திய உணவுப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு என்ற கெமிக்கல் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 313 முந்திரி மற்றும் எள் போன்ற பொருட்கள், 60 மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள், டயட்டிக் உணவுகள் 48 மற்றும் பிற உணவுப் பொருட்கள் 34 ஆகியவற்றில் அந்த கெமிக்கல் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. இதில் 332 பொருட்களில் இந்தியா என குறிப்பிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள பொருட்கள் பிற நாடுகள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்பின் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு என்ற கெமிக்கல் உள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய 87 சரக்கு கண்டைனர்கள் துறைமுக எல்லையிலே தடுத்து நிறுத்தப்பட்டன என்றும் மீதமுள்ளவை சந்தைகளில் இருந்து அகற்றப்பட்டன எனவும் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல் இருப்பது கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எத்திலீன் ஆக்சைடு என்பது ஒரு பூச்சிக்கொல்லி ரசாயனமாகும். இது பெரும்பாலும் மருத்துவ உபகரணங்களில் இருக்கும் கிருமிகளை நீக்க பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இவற்றை மசாலா உள்ளிட்ட உணவு பொருட்கள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படலாம் எனவும் எனவும் கூறப்படுகிறது. உணவுப் பொருட்களில் இதன் அளவு அதிகமானால், பல்வேறு வகையான புற்றுநோய் உள்ளிட்ட பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர். 

அதன்படி, எத்திலீன் ஆக்சைட் கொண்ட உணவு பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் நுரையீரல் பாதிப்பு, கோமா, சுவாச கோளாறு, மூச்சு திணறல், வயிற்றுப்போக்கு, தூக்கம், கண் எரிச்சல், தலைவலி உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

2 hours ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

3 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

3 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

3 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

4 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

4 hours ago