இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஈபிஎஸ் ட்வீட்..!

இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஈபிஎஸ் ட்வீட். 

இசையமைப்பாளர் இளையராஜா,பி டி உஷா, வீரேந்திர ஹெக்கடே மற்றும்  வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர்  மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக  அறிவிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘உலக முழுவதும் ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து, இசைஞானி என்று அன்புடன் அழைக்கப்படும் இசைஞானி இளையராஜா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment