தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அமமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலலை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் என மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டார்.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அமமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான 50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இன்னும் முழுமையாக கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில், தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் குறிப்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் கோவிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் ஏற்கனவே அதிமுக சார்பில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிடிவி தினகரனும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரியில்…