சிறப்பாசிரியர் தேர்வு எழுதிய 300-க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் செங்கோட்டையனை ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் சந்தித்து தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்தனர். உடற்கல்வி, தையல், இசை மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் உள்ள ஆயிரத்து 325 காலிப்பணியிடங்களுக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர்.
தேர்வு எழுதி 7 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால், அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து மனு அளித்தனர். அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்ததோடு, இன்னும் 15 நாட்களில் தேர்வு முடிவுகள் ஓ.எம்.ஆர் சீட்டுடன் வெளியிடப்படும் என்றும், ஜூன் மாதத்திற்குள் பணி ஆணை வழங்கப்படும் என்றும் செங்கோட்டையன் உறுதியளித்தார். மனுகொடுக்க வந்தவர்களிடம் குறைகேட்டதுடன், காலை சிற்றுண்டிக்கும் ஏற்பாடு செய்து அனுப்பிய அமைச்சரின் அன்பைக் கண்டு அவர்கள் நன்றி தெரிவித்து விடைபெற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…
Dheena Re Release: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘தீனா' படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நடிகர் அஜித் குமார் இன்று (மே 1…
Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி…
Election2024 : ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை. ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175…
Cricket Australia : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், தற்போது டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது வருகிற மே-26 ம் தேதி…
Ilaiyaraaja : அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக 'கூலி' பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…