இறுதி நாள் பிரச்சாரம்… மேடையில் கண் கலங்கிய அண்ணாமலை.!

Annamalai : கோவையில் முதியோர் இல்லத்தில் வாக்கு சேகரிப்பின் ஈடுபட்ட போது பெற்றோர் பிள்ளைகளின் வளர்ப்பு குறித்து பேசிய அண்ணாமலை கண்கலங்கினார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்று கோவையில் உள்ள கஸ்தூரிநாயக்கன் பாளையத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அந்த மேடையில் அவர் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் விதம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசுகையில், “என் மண் என் மக்கள் யாத்திரை முடிந்த உடன் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நிலை வந்துவிட்டது. கடந்த ஓராண்டு காலமாக இங்கு வந்து உங்களை சந்தித்து பேச வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால், எனக்கு துளியும் நேரம் கிடைக்கவில்லை. இதனால் நேற்றைய தினம் உறுதியாக நான் உங்களை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதனால் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று இங்கு வந்து உங்களுடன் பேச வேண்டும் என்று நினைத்தேன். தற்போது உங்களை காண எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனால் நான் மிகவும் பாக்கியம் செய்துள்ளேன்”, என்று உருக்கமாக பேசி கொண்டிருக்கும் போது அண்ணாமலை கண் கலங்கினார். அதன்பின் அங்கு இருந்த தொண்டர்கள் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஆதரித்து கோஷமிட்டு அவரை தேற்றினார்.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

19 mins ago

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

39 mins ago

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…

44 mins ago

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

1 hour ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

1 hour ago

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…

1 hour ago