மாஸ்கோ அருகே பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைத்த ஆளில்லா விமானம் (ட்ரோன்) விபத்துக்குள்ளானது.
ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவிற்கு அருகில் உள்ள எரிவாயு நிலையத்திற்கு அருகே ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் எந்த வித பொருள் சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. விபத்து நடந்த பகுதிக்கு அவசரகால சேவைகள் மற்றும் வெடிகுண்டு படைகள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து மாஸ்கோ பிராந்திய கவர்னர் ஆண்ட்ரே வோரோபியோ கூறுகையில், “அடையாளம் தெரியாத ஆளில்லா விமானம் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள கொலோம்னா பகுதியில் உள்ள குபாஸ்டோவோ கிராமத்திற்கு அருகில் பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைத்ததாகத் தெரிகிறது” என்று கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு நிறுவனங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். முன்னதாக உக்ரைன் எல்லையில் ரஷ்யாவில் உள்ள பகுதிகளை குறிவைத்து கடந்த இரண்டு நாட்களாக பல ஆளில்லா விமான தாக்குதல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…