உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய பீட்ரூட் ஸ்மூத்தி செய்வது எப்படி?
இன்று நாடெங்கும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைகிறது. எனவே ஆரோக்கியமான உணவை பின்பற்றி, வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முடியும். மேலும் இதயம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த உணவியல் நிபுணர் சயனிகா ஷர்மா கொரோனாவை எதிர்த்து போராட, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய பீட்ரூட் ஸ்முத்தி குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம். இதன் மூலம் ரத்த ஓட்டம் சரியாக அமைவதுடன், ஆக்சிஜன் அளவு அதிகரிக்க உதவுகிறது.
முதலில் ஒரு பீட்ரூட்டை சிறிய துண்டுகளாக கழுவி, சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். பின் 2 தக்காளியை எடுத்து அதனையும் சிறிய துண்டுகளாக வெட்டி பீட்ரூட் மற்றும் தக்காளி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்றாக மிருதுவாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவேண்டும். இப்போது சத்தான சுவையான பீட்ரூட் ஸ்முத்தி தயார்.
பீட்ரூட் அலர்ஜி எதிர்ப்பு பானம் மற்றும் இயற்கையாகவே இரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடியது ஆகும். இது விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சிறந்த பானமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. பீட்ரூட்டில் பைபர், போலேட், மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது. மேலும் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. தக்காளியில் பொட்டாசியம் வைட்டமின் பி மற்றும் ஈ மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் உள்ளது. இது நமது செல்கள் சேதமடைவதிலிருந்து பாதுகாக்கிறது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…