பிளாஸ்மா சிகிச்சை உதவுகிறதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
சார்ஸ், எபோலா போன்ற வைரஸ் நோய்கள் உலகில் பரவிய போது பல நாடுகளும் பிளாஸ்மா சிகிச்சை முறையை கடைபிடித்தனர். அதில் வெற்றியும் கண்டனர். பிளாஸ்மா சிகிச்சை என்பது வைரஸ் நோய் தாக்கியவர்களிடம் இருந்து பெறப்படும் எதிர்ப்பு அணுக்கள் சிகிச்சை முறையாகும். கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிலிம்போ சைட் செல்களில் ஒருவித நோய் எதிர்ப்பு சக்தி திரவம் சுரக்கும். அந்த திரவத்தை தனியாக பிரித்து எடுத்தால் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் அணுக்கள் கிடைக்கும்.
இந்த பிளாஸ்மா சிகிச்சையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தலாம் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்தது. பின்னர் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் குறைய பிளாஸ்மா சகிச்சை உதவவில்லை என்றும் இந்திய மருத்தவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருப்பினும், டெல்லி, தமிழ்நாடு ஆகியவற்றில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிளாஸ்மா சிகிச்சை உதவுகிறதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ள ஐசிஎம்ஆர், சைடஸ் காடிலா, பாரத் பயோடெக் போன்ற நிறுவனங்கள் முதல் கட்ட சோதனைகளை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், சீரம் நிறுவனம் 2ம் கட்ட சோதனைகளை நிறைவு செய்துள்ளதாகவும், அனுமதி பெற்ற பிறகு, நாட்டில் உள்ள 14 இடங்களில், ஆயிரத்து 500 நோயாகளிகளுக்கு 3 ஆம் கட்ட பரிசோதனை நடத்தப்படும் எனவும் ஐ.சி.எம்.ஆர் விளக்கம் அளித்துள்ளது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…