மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் தமிழகத்திலும் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் சில பெண்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு எதிராகவும் தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சாலைகளில் கோலம் போட்டு அந்த கோலத்தில் NO CAA, NO NRC என்று அவர்கள் எழுதி தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் செய்தனர்.
இதனை அடுத்து கோலம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், சற்று நேரத்தில் அவர்களை விடுவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து திமுக எம்.பி கனிமொழி, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என்பது தற்போது தெளிவாகியுள்ளது. பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உறுதி செய்து தங்கள் எஜமானின் மனம் குளிர செயல்பட்டு வரும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுக்கள்.’ எனவும் பதிவிட்டுள்ளார்.
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…
Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்…
Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…