ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி உண்மையா.? எழுந்த சந்தேகம்.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுவதும்  1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 லட்சத்திற்கு மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க  உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ரஷ்யாவை சேர்ந்த செசோனோவ் பல்கலைக்கழக இயக்குனர் Translational Medicine and Biotechnology இயக்குனர் வாடிம் தாராசோவ் அவர்கள்  கூறுகையில், செசோனோவ் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றி பெற்று விட்டதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, செச்செனோவ் பல்கலைக்கழகத்தின் கூற்று குறித்து நிபுணர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், ஜூலை 7 -ம் தேதி உலக சுகாதார நிறுவனம் (WHO) ரஷ்ய நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி இன்னும் முதல் கட்டத்தில் உள்ளது என்று கூறியது. அதாவது, ஒரு  தடுப்பூசி கண்டுபிடிக்க  குறைந்தது 3-4 சோதனைகள் மூலம் பாதுகாப்பானது என அறிவிக்கப்படும்.

செசெனோவ் பல்கலைக்கழகம் எப்படி இவ்வளவு..? சீக்கிரம் தடுப்பூசியை உருவாக்கியதாகக் கூற முடியும் என்று நிபுணர்கள் கேட்கிறார்கள். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உலகம் முழுவதும் சுமார் 21 தடுப்பூசிகள் தற்போது முக்கியமான சோதனை கட்டத்தில் உள்ளது. அவற்றில் இரண்டு மட்டுமே மனித சோதனைகளின் மேம்பட்ட கட்டத்தை எட்டியுள்ளன.

இதில், சீன நிறுவனமான சினோவாக் தடுப்பூசி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகாவின் வைரஸ் திசையன் தடுப்பூசி ஆகியவை அடங்கும். செசெனோவ் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் தடுப்பூசியின் அனைத்து மனித சோதனைகளும் முடிந்துவிட்டதாகக் கூறியிருந்தார். ஆனால், ஆய்வில் 40 தன்னார்வலர்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இரண்டாம் கட்டத்தில் குறைந்தது 100 பேரையும், மூன்றாம் கட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களையும் சேர்க்க வேண்டியது அவசியம். இந்த சோதனையை பார்க்கும்போது ரஷ்ய தடுப்பூசி மனித சோதனையில் முதல் கட்டத்தை முடித்துவிட்டது என்பதை இது காட்டுகிறது என  நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரஷ்ய தடுப்பூசி சோதனையை ஜூன் 18 ஆம் தேதி தொடங்கி, செச்செனோவ் பல்கலைக்கழகம் அனைத்து சோதனைகளையும் ஒரு மாதத்தில் முடித்து விட்டு, தடுப்பூசி மனித பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்று அறிவித்தது. ஆனால், மலேரியா, எபோலா மற்றும் டெங்கு ஆகிய நோய்க்கான தடுப்பூசிகள் உருவாக குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆனது என நிபுணர்கள் தெரிவித்தனர். எனவே ரஷ்ய தடுப்பூசி மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளதாகவே இருக்கட்டும்.

ஆனால், விரைவில் மனித பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என அறிவிப்பது புத்திசாலித்தனம் அல்ல. எனவே, தடுப்பூசி குறித்து ரஷ்யாவின் கூற்று முற்றிலும் சரியானதல்ல என்று சொல்வது தவறல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர். ரஷ்ய தடுப்பூசி ஆய்வை, முதல்கட்டமாகத்தான் முடிந்துள்ளது. இதுவரை, மூன்றாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படாமல் பெரிய அளவிலான எந்த தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

murugan

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

4 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

10 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

11 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

12 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

13 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

13 hours ago