கரெக்சன் சொல்லிக்கொண்டே இருந்த தனுஷ்! கடுப்பாகி சந்தானம் கிட்ட கிளம்பிய இயக்குனர்?

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய 50-வது படத்தை அவரே இயக்கி அவரே நடித்து வருகிறார். இதற்கிடையில், ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தை இயக்கி இருந்த இயக்குனர் செல்ல அய்யாவுவிடம் ஒரு கதையை நடிகர் தனுஷ் கேட்டாராம். செல்ல அய்யாவு விஸ்ணு விஷாலை வைத்து இயக்கி இருந்த ‘கட்டா குஸ்தி’  திரைப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி இருந்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து ஒரு அருமையான கதையை செல்ல அய்யாவு தனுஷை சந்தித்து கதையையும் கூறினாராம். முதல் முறை கேட்டவுடன் தனுஷ் ஒரு கரெக்சன் சொன்னாராம், பிறகு அந்த கரெக்சனை சரி செய்துவிட்டு மீண்டும் தனுஷிடம் கதையை கூறும் போதும் தனுஷ் கரெக்சன் சொன்னாராம். அதன்பிறகு மீண்டும் மீண்டும் இப்படி கரெக்சன் சொல்லிக்கொண்டே தனுஷ் இருந்தாராம்.

ஓரு கட்டத்திற்கு மேல் சற்று கடுப்பான இயக்குனர் செல்ல அய்யாவு தனுஷிடம் கதையை கூறுவதை நிறுத்துவிட்டு அந்த படத்தில் இருந்தே விலகி விட்டாராம்.  தற்போது தனுஷை தொடர்ந்து நடிகர் சந்தானத்திடம் ஒரு கதையை அவர் கூறியிருக்கிறாராம். அவர் கூறிய அந்த கதை காமெடி கதைக்களத்தை வைத்து நகர்வதால் அது தனக்கு செட் ஆகும் என யோசித்து அதில் நடிக்கவும் சந்தானம் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

சந்தானம் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். எனவே, அந்த படங்களை நடித்துமுடித்துவிட்டு உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன் என செல்ல அய்யாவுவிடம் கூறிவிட்டாராம். இதனால் செல்ல அய்யாவும் சந்தனத்தை வைத்து இயக்கும் படத்திற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறாராம். விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பும் வெளியாகவிருக்கிறதாம்.

ஏற்கனவே, செல்ல அய்யாவு இயக்கிய ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்த சூழலில், அவர் சந்தானத்தை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக வெளியான தகவல் அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.