தனுஷ் கிடையாது…கௌதம் கார்த்திக்கு கதை கூறிய செல்வராகவன்..!

இயக்குனர் செல்வராகவன் அடுத்ததாக நடிகர் கெளதம் கார்த்திக்கை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் செல்வராகவன் நடிகர் தனுஷை வைத்து ஒரு புதிய திரைப்படம் எடுக்கவுள்ளார். இந்த திரைப்படம் புதுப்பேட்டை இரண்டாம் பாகமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளாராம். மேலும் இந்த படத்தை வினோத் குமார் தயாரிக்கவுள்ளாராம்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க குறைந்த பட்சம் 6 மாதம் ஆகும். ஆம் நடிகர் தனுஷ் பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதனால் இந்த இடைவெளி காலத்தில் இயக்குனர் செல்வராகவன் புதிய திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக் நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் மிகவும் அதிரடி கதையை கொண்ட கேங் ஸ்டார் திரைப்படமாம். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார்வப்பூர்வ அறிவிப்பு ஒன்றும் வெளியாகிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.