தினம் ஒரு திருவெம்பாவையின் இன்றைய தொடர்ச்சி

  • தென்னாடுடைய சிவனே போற்றி என முழங்குங்கள் தெவிட்டாத இன்பத்தை அடைய.
  • இதோ உங்களுக்காக இன்றய திருவெம்பாவை.

 

பாடல்:

முத்தென்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்

அத்தன் ஆனந்தன் அமுதன்என் ற்ல்ளுறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்

பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ?

எந்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?

சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!

 

பாடல் விளக்கம்:

எழுப்புபவர்:

முத்தினை போன்ற வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் நீ, எங்களுக்கு முன் வந்து எங்கள் எதிரே வந்து ” என் அன்பனே! ஆனந்தனே! அமுதனே!” என்று வாயூரி இனிக்க இறைவனை புகழ்வாய்! எழுந்து வந்து உன் வாசற் கதவைத் திற!

உள்ளே இருப்பவள்:

நீங்கள் இறைவனிடம் பற்ற்றுடையவர்கள்: இறைவனுடைய பழைய அடியார்கள்: அவனைப் புகழும் முறைமை பெற்றவர்கள். நான் புதிய அடிமை!  உங்கள் பெருமயால் என்னுடைய சிறுமையை நீக்கி ஆட் கொள்ளலாகாதோ?

எழுப்புபவர்:

உன் அன்புடைமை எங்க்களுக்கு தெரியாதா? அதை எல்லோரும் அறிவோம். அழகிய மனம் உடையவராகிய  நம் சிவபெருமானை பாடாமலிருப்பாரோ?  உன்னை எழுப்ப வந்தோமோ நாங்கள், எங்க்களுக்கு இவ்வளவு பேச்சும் வேண்டியதுதான்?

author avatar
Kaliraj