சட்டவிரோதமாக ஆக்ஸிஜன் விற்பனை செய்யப்பட்டதாக புகார் – போலீஸ் அதிரடி நடவடிக்கை
புதுடெல்லியில் கேட் ஆம்புலன்ஸ் மூலம் சட்டவிரோதமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விற்பனை செய்த 2 பேரை தென் டெல்லி போலீசார் திங்கள்கிழமை (மே 10) இன்று கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள அம்பேத்கர் நகர் காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக ஆக்ஸிஜன் விற்பனை செய்யப்பட்டதாக புகார் வந்தது, அதன்பிறகு காவல்துறையினர் விசாரித்தில் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரான பவன் மற்றும் அவரது கூட்டாளர் இருவரும் அவர்கள் பணிபுரிந்த கேட் ஆம்புலன்சில் இருந்து ஆக்ஸிஜனை விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் பவனை விசாரித்தபோது அவர் காவல்துறையினரை தவறாக வழிநடத்த முயன்றுள்ளார், ஆனால் அவரது தொலைபேசியிலிருந்து தகவல்களை மீட்டெடுத்த காவல்துறையினரின் கடுமையான விசாரணையில் பவன் கள்ள சந்தையில் 15 லிட்டர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு 40 ஆயிரம் ரூபாயும், 50 லிட்டர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு 90 ஆயிரம் ரூபாயும் சம்பாதித்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் அவர் சமூக வளைதளத்தில் ஆக்ஸிஜன் தேவைப்படுவோரை தன்னை அனுகும் படி செல்போன் எண்ணை பகிர்ந்துள்ளார். மேலும் பேடிஎம் வழியாக அவர்கள் ஆக்ஸிஜன் தேவைப்படுவோரிடம் இருந்து பணத்தை பெற்றுள்ளனர். மேலும் சோதனையின்போது 2 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 32 பிபிஇ கிட்கள் மற்றும் ரூ .1 லட்சம் பணத்தை போலீசார் மீட்டுள்ளனர்
இதனையடுத்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் பிளாக் மார்க்கெட்டிங்கில் தொடர்புடைய கேட் ஆம்புலன்ஸ் ஓட்டுனரான விபின் என்ற நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…