ஐபிஎல் தொடரில் 7 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச தேர்வு செய்தது.
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, தவான் இருவரும் களமிறங்க நிதானமாக விளையாடி வந்த பிருத்வி ஷா அரைசதம் விளாசினார். பின்னர், தவான் 35 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்த சில நிமிடங்களில் பிருத்வி ஷா 64 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் எடுத்தனர். 176 ரன்கள் இலக்குடன் சென்னை அணியில் தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஷேன் வாட்சன் இறங்கினர். ஆனால் இருவரும் நிலைத்து நிற்கவில்லை சொற்ப ரன்களில் வெளியேறினர்.
பின்னர், டு பிளிஸ்சிஸ் , ருதுராஜ் கெய்க்வாட் இறங்க ருதுராஜ் வந்த வேகத்தில் 5 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, கேதார் ஜாதவ் 28 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, தொடங்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வந்த டு பிளிஸ்சிஸ் 43 ரன்னில் விக்கெட் கீப்பர் பண்ட்டிடம் கேட்சை கொடுத்தார். அடுத்து இறங்கிய தோனி 15, ஜடேஜா 12 ரன்கள் எடுத்தனர்.
இறுதியாக சென்னை அணி 20 ஓவர் 7 விக்கெட்டை இழந்து ரன்கள் எடுத்து 131 ரன்கள் எடுத்து, 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டெல்லி அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…