ஆந்திரப்பிரதேசத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு – 4,872 பேருக்கு புதிதாக தொற்று..!

  • கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திரப்பிரதேசத்தில் 4,872 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,552 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திரப்பிரதேசத்தில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில், இதில் 4,872 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 86 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,552 ஆக உயர்ந்துள்ளது. 13,702 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன்படி, ஆந்திராவில் இதுவரை 16,37,149 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது ஆந்திராவில் 1,14,510 பேர் கொரோனா வார்டில் நோய் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.