அமெரிக்க விமான நிலையத்தில் இந்தியரின் பையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு சாணம்!

அமெரிக்காவிற்கு சென்ற இந்தியர் ஒருவரிடம் இருந்து பை நிறைய மாட்டு சாணம் வாஷிங்டன் விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. எனவே மக்கள் தடுப்பூசி போடா வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். சமூக விதிகளை பின்பற்ற வேண்டும் என பல்வேறு முறைகளில் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே இயற்கை முறையில் கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாக்கவும் சில இயற்கையான வழிமுறை கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில ஆவி பிடிப்பது நாட்டு மருந்து வகைகளை உட்கொள்வது, கபசுரக் குடிநீர் குடிப்பது ஆகிய இயற்கை வழிமுறைகள் பெருமளவில் கையாண்டு வரப்படுகிறது.

ஆனால் ஒரு புறம் மாட்டு சாணத்தை உடலில் பூசிக் கொள்வதும், மாட்டு சிறுநீர் குடிப்பது கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்கும் என பலர் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். இவை அனைத்தும் உடலுக்கு மேலும் சில நோய்களை வரவழைக்கும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் விமான நிலையத்தில் வைத்து இந்திய பயணி ஒருவரிடமிருந்து பை நிறைய வரட்டி எனும் மாட்டு சாணம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவற்றை அந்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். ஏனென்றால் அமெரிக்காவில் மாட்டு சாணம் தடைசெய்யப்பட்ட ஒன்று. இந்த மாட்டு சாணம் மூலம் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் தொற்று நோய் ஏற்படும் என்பதால் தான் இவை அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது.

Rebekal

Recent Posts

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

25 mins ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

31 mins ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

53 mins ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

1 hour ago

மும்பை கதை ஓவர்! ஹர்திக் பாண்டியா செஞ்ச தப்பு? ஆதங்கத்தை கொட்டிய இர்பான் பதான்..

Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…

1 hour ago

பணிப்பெண் வீடியோ.. என் இதயத்தில் ரத்தம் கொட்டியது.! மம்தா உருக்கம்.!

Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…

1 hour ago