சீனாவில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த வைரஸ் வூஹான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் இருந்த ஒரு விலங்குகளிடம் இருந்துதான் தோன்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த கொரனா வைரஸ் காய்ச்சல் தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளிலும் பரவி உள்ளது.
இதைத்தொடர்ந்து வூஹான் நகரில் இந்தியாவில் இருந்து மருத்துவம் மற்றும் பிறபடிப்புகளை படிக்கும் 700 மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியா சார்பில் கூறப்பட்டது. இந்தியாவில் “கொரனா வைரஸ்” பரவாமல் இருக்க அனைத்து சர்வதேச நிலையத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
முக்கியமாக சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இன்று பரிசோதனை செய்ததில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தனி வார்டு அமைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் “கொரனா வைரஸ்” தாக்கி 25 பேர் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…
Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…