இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினருக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 15 லட்சத் தொகையை கருணாஸ் வழங்கி உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் உலகெங்கும் அதிதீவிரமடைந்து வருகிறது.இந்நிலையில் மின்னல் வேகமாக பரவி வரும் தொற்றை தடுக்கும் முயற்சியில் மக்களை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், சமூக இடைவெளியை உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டு தமிழகத்தில் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இருந்த போதும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.124 பேர் தமிழகத்தில் வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் பாதிப்பு அதிகமாவுள்ள அந்தந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விழிப்புணர்வையும், மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இரவு பகல் பாராது காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களை பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை செலுத்துகிறார்கள் என கவனம் பெற்ற நிலையில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கொரோனா நிவாரண நிதியாக ரூ. 10 லட்சமும், அதேபோல் இராமநாதபுரம் மாவட்டம் முழுதும் கொரோனா தொற்றிலிருந்து அன்றாடம் காக்க இரவு பகல் பாராமல் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்களுக்கு ரூ. 5 லட்சமும் தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். கருணாஸ் அறிவித்துள்ளார்.இந்நிலையில்
ஏற்கெனவே பொதுமக்கள் நிவாரண நிதிக்காக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்-வின் கோரிக்கையை ஏற்று ரூ. 10 லட்சம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…