தெலுங்கான மந்திரி மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி .!

தெலுங்கான மந்திரி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும், பல பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, சிலர் மீண்டும் வந்துள்ளனர். அந்த வகையில் தெலுங்கானாவில் தொழில்துறை மந்திரியாக இருந்து வருபவர் மல்லா ரெட்டி. கடந்த வாரம் இவருக்கும், இவரது மனைவிக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மந்திரி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து மருத்துவர்களின் பரிந்துரையின் படி மல்லா ரெட்டி தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது, தனக்கு நோய் தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமலே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சூழலில் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும், யாரும் கவலைப்பட கூடாது என்று கூறியுள்ளார்.